Loading . . .




அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை மீண்டும்?

Janani G 1 day ago உலக செய்திகள்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதி பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏப்ரல் 16ஆம் தேதி இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறலாம் என கூறப்படுகிறது. இதற்கு முன் ஏப்ரல் 11ஆம் தேதி பாகிஸ்தானில் நடைபெற்ற பேச்சுவார்த்தை சுமார் 21 மணி நேரம் நீடித்தும் எந்த உடன்பாடும் எட்டப்படாமல் முடிவடைந்தது.

இதனால் இரு நாடுகளுக்கிடையே பதற்றம் அதிகரித்து, போர் நிலை உருவாகும் வாய்ப்பு குறித்து கவலை நிலவுகிறது. இந்த சூழலில், ஜெனீவாவில் புதிய சுற்று பேச்சுவார்த்தை நடத்த இரு தரப்பும் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பேச்சுவார்த்தை பதற்றத்தை குறைக்கும் நோக்கில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இரு நாடுகளும் மீண்டும் உரையாடலுக்கு முன்வருவது முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.

இந்த முயற்சி நிலைமையை சீராக்க உதவக்கூடியதாக இருப்பதால், அதன் முடிவை உலகம் முழுவதும் கவனமாக எதிர்பார்த்து வருகிறது.


0 Comments

Post your comment here

உலக செய்திகள் Relateted News