பாகிஸ்தான், சவுதி அரேபியாவுடன் கொண்டுள்ள பாதுகாப்பு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஆயிரக்கணக்கான படைகள் மற்றும் போர் விமானங்களை அங்கு அனுப்பியுள்ளது.
சுமார் 13,000 படையினரும் 10 முதல் 18 வரை போர் விமானங்களும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பாகிஸ்தான் வான்படைக்கு சொந்தமான இந்த விமானங்கள் மற்றும் ஆதரவு விமானங்கள், சவுதி அரேபியாவின் கிங் அப்துலஅசீஸ் வான்படை தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளன என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை இரு நாடுகளின் படைகளுக்கிடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், செயல்திறனை மேம்படுத்தவும் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், பிராந்திய மற்றும் சர்வதேச அளவில் பாதுகாப்பையும் நிலைத்தன்மையையும் உறுதிசெய்யும் நோக்கமும் இதற்குள் உள்ளது.
கடந்த ஆண்டு கையெழுத்தான பாதுகாப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த நியமனம் நடைபெற்றுள்ளதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த ஒப்பந்தத்தின் படி, ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அது மற்றொரு நாட்டின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக கருதப்படும்.
இந்த நடவடிக்கை இரு நாடுகளின் பாதுகாப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
0 Comments