ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியாவில் வடமாநிலங்களிலும் உணரப்பட்டது
The Forecast 1 year ago தமிழ்நாடு
பூமிக்கு கீழே 130 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவாகியுள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் இந்தியாவில் வடமாநிலங்களிலும் உணரப்பட்டது. மேலும், இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு இந்தியாவில் உள்ள காஷ்மீர், பஞ்சாப், டெல்லி வரை உணரப்பட்டது. இதைத்தொடர்ந்து, பாகிஸ்தானிலும் இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, பெஷாவர் ஆகிய நகரங்கள் குலுங்கின. சமீபகாலமாக வட மாநிலங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது, இது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments