குறுவை பருவத்திற்கான முன்னேற்பாடுகள் மற்றும் விதை கையிருப்பு, தேவை குறித்து மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் காணொலி வாயிலாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது
The Forecast 11 months ago தமிழ்நாடு
சென்னை தலைமைச் செயலகத்தில் வேளாண்மை உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில், குறுவை பருவத்திற்கான முன்னேற்பாடுகள் மற்றும் விதை கையிருப்பு, தேவை குறித்து மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் காணொலி வாயிலாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசுச் செயலாளர் வ.தட்சிணாமூர்த்தி, இ.ஆ.ப, வேளாண்மை துறை இயக்குநர் பி.முருகேஷ், இ.ஆ.ப., தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் பி.குமரவேல்பாண்டியன், இ.ஆ.ப., தலைமைப் பொறியாளர் (வே.பொ) சந்திரசேகர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments