Loading . . .




விவ​சா​யிகளிடம் கொள்முதல் செய்த நெல்​லுக்கு 10 நாட்​களில் பணம் வழங்​கப்​படும் தமிழக அரசு உறு​தியை அளித்​துள்​ளது

The Forecast 11 months ago வேளாண்மை

விவ​சா​யிகளிடம் கொள்முதல் செய்த நெல்​லுக்கு 10 நாட்​களில் பணம் வழங்​கப்​படும் அரசு உறு​தியை அளித்​துள்​ளது. தமிழகத்​தில் உள்ள நேரடி நெல் கொள்​முதல் நிலை​யங்​களில் நடை​பெறும் முறை​கேடு​களை தடுக்க வலி​யுறுத்தி சென்னை கோயம்​பேட்​டில் உள்ள தமிழ்​நாடு நுகர்​பொருள் வாணிபக் கழகத்​தின்மேலாண் இயக்​குநர் அலுவலகம்  முற்​றுகை​யிடப்படும் என தமிழ்​நாடு அனைத்து விவ​சா​யிகள் சங்​கங்​களின் ஒருங்​கிணைப்பு குழு அறி​வித்​திருந்​தது.

முன்​ன​தாக, அக்​குழு​வின் தலை​வர் பி.ஆர்​.​பாண்​டியன் உள்​ளிட்ட விவ​சா​யிகளு​டன் டிஎன்​சிஎஸ்சி மேலாண் இயக்​குர் சண்​முகசுந்​தரம் தலை​மை​யில் நேற்று டிஎன்​சிஎஸ்சி அலு​வல​கத்​தில் பேச்​சு​வார்த்தை நடத்​தினர். இதில், நேரடி நெல் கொள்முதல் நிலை​யங்​களில் கொள்​முதல் செய்த நெல்​லுக்கு 10 நாட்​களுக்குள் அனை​வருக்​கும் பணம் வழங்​கப்​படும். கொள்​முதலில் தனி​யாரை அனு​ம​திப்​ப​தில்லை என அரசுக்கு பரிந்​துரைக்​கப்​படும் என அதி​காரி​கள் உறு​தி​யளித்​தனர்.

அதனைத் தொடர்ந்து பி.ஆர்​.​பாண்​டியன் செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “உணவுத்​துறை மற்​றும் டிஎன்​சிஎஸ்சி அதி​காரி​கள் உறு​தி​யளித்​ததன் அடிப்​படை​யில், முற்​றுகை போ​ராட்​டத்​தை தள்​ளிவைக்கிறோம்'' என்றார்.

0 Comments

Post your comment here

வேளாண்மை Relateted News