தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் பல்கலைக்கழக அந்தஸ்து பெற்றதாக மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
மார்ச் 30, 2026 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி, என்சிஇஆர்டி நிறுவனம் இனி பாடநெறிகள் நடத்தவும் பட்டங்கள் வழங்கவும் அனுமதி பெற்றுள்ளது. இந்த முடிவு, பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து கல்வி திட்டங்களும் பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைகளுக்கு இணங்க இருக்க வேண்டும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், புதிய பாடநெறிகளை தொடங்கவும், வெளிநாட்டு மற்றும் வெளியக வளாகங்களை அமைக்கவும் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
பள்ளிக் கல்வி துறையில் முக்கிய பங்காற்றும் இந்த நிறுவனம், இந்த புதிய அந்தஸ்தின் மூலம் கல்வி மற்றும் ஆய்வுத் திறனை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முடிவு, கல்வித் துறையில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.
0 Comments