சிபிஎஸ்இ 2026–27 கல்வியாண்டில் அமல்படுத்தப்பட உள்ள முக்கிய பாடத்திட்ட மாற்றங்களை அறிவித்துள்ளது. இதில் 6ஆம் வகுப்பிலிருந்து மூன்று மொழி முறையும், 9ஆம் வகுப்பில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களுக்கு இரு நிலை முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு ஏற்ப, 6ஆம் வகுப்பிலிருந்து மூன்று மொழி முறை கட்டாயமாக அமல்படுத்தப்படும். இதில் குறைந்தது இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும். இது மாணவர்களின் பல்மொழி திறனை மேம்படுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ளது.
வெளிநாட்டு பள்ளிகளில் இருந்து திரும்பும் மாணவர்களுக்கு, மூன்றாவது மொழி கிடைக்காத சூழலில் சில விதிவிலக்குகள் வழங்கப்படலாம். ஆனால், அவர்கள் நிர்ணயிக்கப்பட்ட பாட எண்ணிக்கையை பூர்த்தி செய்ய வேண்டும்.
மேலும், 9ஆம் வகுப்பில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களுக்கு இரண்டு நிலை முறை அறிமுகமாகிறது. அனைத்து மாணவர்களும் பொதுத் தேர்வை எழுத வேண்டும். மேம்பட்ட நிலை தேர்வு விருப்பத் தேர்வாக இருக்கும். அதன் மதிப்பெண்கள் தனியாக பதிவு செய்யப்படும்.
இந்த மாற்றங்கள் கல்வி தரத்தை உயர்த்தும் முயற்சியாக பார்க்கப்படுகின்றன.
0 Comments