ஓபன்ஏஐ நிறுவனம், ஏஐ தொழில்நுட்பத்துடன் செயல்படும் புதிய ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சாதனம் 2027ஆம் ஆண்டு சந்தைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் Dimensity 9600 சிப் மூலம் இயங்கும் என கூறப்படுகிறது. இதில் உள்ள ஏஐ ஏஜென்ட் பயனாளர்களின் பணிகளை நேரடியாக செய்து உதவும் திறன் கொண்டதாக இருக்கும்.
2027 முதல் 2028க்குள் சுமார் 30 மில்லியன் யூனிட்களை உற்பத்தி செய்யும் இலக்குடன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இது உலக ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய போட்டியை உருவாக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
இந்த முயற்சியின் மூலம் ஆப்பிள் மற்றும் சாம்சங் போன்ற முன்னணி நிறுவனங்களுக்கு நேரடி போட்டி உருவாகலாம் என கூறப்படுகிறது.
இதுவரை விலை மற்றும் முழு அம்சங்கள் பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை.
இந்த முன்னேற்றம், நுகர்வோர் சாதனங்களில் ஏஐ பயன்பாடு அதிகரித்து வருவதை காட்டுகிறது.
0 Comments