தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை, ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியத்தின் இந்தியாவிற்கான பிரதிநிதி சிந்தியா மெக்காஃப்ரி தலைமையிலான யுனிசெஃப் குழுவினர் சந்தித்து, குழந்தைகள் நலன் மற்றும் வளர்ச்சி தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து கலந்துரையாடினர். இந்த சந்திப்பு, மாநில அரசும் யுனிசெஃப்பும் இணைந்து மேற்கொண்டு வரும் குழந்தைகள் நலத் திட்டங்களின் தொடர்ச்சியாக அமைந்தது.
இந்தக் குழுவில், யுனிசெஃப் சென்னைக்கான பொறுப்புத் தலைவரும் சமூகக் கொள்கை நிபுணருமான கணேசன் குமரேசன், உயர் அலுவலர்களான ஷியாம் சுதீர் பண்டி மற்றும் முனைவர் அகிலா ராதாகிருஷ்ணன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
சந்திப்பின்போது, குழந்தைகளின் நலன், கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக முன்னேற்றம் தொடர்பான பல்வேறு முயற்சிகள் குறித்து கருத்துகள் பரிமாறப்பட்டன. மாநிலத்தில் குழந்தைகளின் முழுமையான வளர்ச்சிக்கான திட்டங்களை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற்றது.
தமிழ்நாடு அரசும் யுனிசெஃப்பும் பல ஆண்டுகளாக குழந்தைகள் உரிமைகள் மற்றும் சமூக நலத் திட்டங்களில் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்தச் சந்திப்பு, அந்த ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.
குழந்தைகளின் பாதுகாப்பு, நலன் மற்றும் எதிர்கால முன்னேற்றத்திற்கான கூட்டு முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுக்க இரு தரப்பினரும் உறுதியை மீண்டும் வலியுறுத்தியதுடன், சந்திப்பு நிறைவடைந்தது.
0 Comments