தேனி மாவட்டம் உத்தமபாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் பெ.அனந்தப்பன், ரா.நாட்ராயன் மற்றும் டேவிட்பால் ஆகிய மூவரும் சிறப்பு சார்பு ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். அதனை தொடர்ந்து தேனி மாவட்ட எஸ்.பி.டோங்கரே பிரவீன் உமேஷ்,உத்தமபாளையம் ஏஎஸ்பி மதுகுமாரி மற்றும் உத்தமபாளையம் காவல் ஆய்வாளர் சிலைமணி ஆகியோரிடமும் மூவரும் வாழ்த்து பெற்றனர்.பதவி உயர்வு பெற்ற சிறப்பு சார்பு ஆய்வாளர்களுக்கு துறை சார்ந்தவர்களும் பாராட்டி பணி சிறக்க வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
0 Comments