சென்னை: தாம்பரம் மாநகர காவல்துறையின் முன்னாள் காவல் ஆணையர் எம். ரவி பெயரில் சமூக ஊடகங்கள் மூலமாக மோசடி நடைபெறுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சைபர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னை நீலாங்கரை பகுதியைச் சேர்ந்தவர் எம்.ரவி. இவர், தமிழக காவல்துறையில் டிஜிபி ஆக இருந்து கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார். கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னை பெருநகர காவல் துறையைப் பிரித்து புதிதாக தாம்பரம் மாநகர காவல்துறை உருவாக்கப்பட்டபோது, தாம்பரம் மாநகர காவல்துறையின் முதல் காவல் ஆணையராக ரவி நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments