கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மங்களபுரம் ஊராட்சியில் விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்.
The Forecast 2 years ago கேரளா
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா, 2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை அடைவதற்கான ஒரு படியாக இந்த யாத்திரை அமையும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள மங்களபுரம் ஊராட்சியில் விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரையை நிதியமைச்சர் தொடங்கி வைத்தார். விபிஎஸ்ஒய், மத்திய திட்டங்களின் அனைத்து நற்பலன்களும் தகுதியானவர்களுக்கு வழங்குவதையும், தகுதியுள்ள அனைத்து பயனாளிகளையும் பல்வேறு திட்டங்களின் கீழ் சேர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று சீதாராமன் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியப் பொருளாதாரம் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகவும், ஒவ்வொரு மாநிலமும் அதன் மாதாந்திர நிலுவைத் தொகையை சரியான நேரத்தில் அல்லது முன்கூட்டியே பெறுவதை அரசாங்கம் உறுதிசெய்கிறது என்றும் நிதியமைச்சர் கூறினார். மக்கள் பெரிதும் பயன்பெறும் பல்வேறு மத்திய திட்டங்களை அமைச்சர் பட்டியலிட்டார். நிகழ்ச்சியில் தகுதியுடைய பயனாளிகளுக்கு பல்வேறு திட்டங்களின் பலன்களையும் சீதாராமன் வழங்கினார்.
0 Comments