Loading . . .




ஜாமின் மனுக்களைத் தானியங்கி இயந்திரம் மூலம் சரிபார்க்கும் புதிய முறையை ஜூலை 10ம் தேதி முதல் அமல்படுத்த உள்ளது கேரள ஐகோர்ட்

The Forecast 2 years ago கேரளா

நாட்டிலேயே முதன்முறையாக, ஜாமீன் மனுக்களை விசாரணைக்கு பட்டியலிடுவதற்கு முன்பாக இயந்திரம் மூலம் தானியங்கி முறையில் ஆய்வு செய்யும் முறையை கேரள உயர் நீதிமன்றம் அறிமுகப்படுத்த உள்ளது.மனுவை விசாரணைக்கு நீதிமன்றத்தில் பட்டியலிடுவதற்கு முன் குறைபாடுகளை சரிபார்க்க இயந்திர சோதனை செய்யப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது. இந்த புதிய தானியங்கி அமைப்பு ஜூலை10-ம் தேதி முதல் நடைமுறைபடுத்தபடும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.ஆகஸ்ட் 1 வரை, ஜாமீன் விண்ணப்பங்களுக்கு தானியங்கி இயந்திர ஆய்வு அல்லது தாக்கல் செய்யும் அதிகாரியின் ஆய்வு ஆய்வு ஆகியவற்றில் விரும்பியதை தேர்வு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொகுதி மதிப்பீடு செய்யப்படும் போது, ஆகஸ்ட் 1 முதல் அனைத்து ஜாமீன் விண்ணப்பங்களுக்கும் இயந்திர ஆய்வு கட்டாயமக்கபடும் என தெரிவிக்கபட்டுள்ளது.

0 Comments

Post your comment here

கேரளா Relateted News