3 நாட்கள் தொடர்ந்து ஏற்பட்ட சரிவுக்கு பிறகு, இந்திய பங்குச்சந்தைகள் மீண்டும் சிறு எழுச்சியைக் கண்டுள்ளது. சென்செக்ஸ் 318 புள்ளிகள் உயர்ந்து 83,739-ஐத் தொட்டது, நிஃப்டியும் 87 புள்ளிகள் உயர்ந்து 25,543 என்ற நிலையில் வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது. இதனால் முதலீட்டாளர்களிடையே நம்பிக்கை மீண்டும் எழுந்துள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்பட்ட சரிவால் முதலீட்டாளர்கள் பெரும் நட்டத்தை சந்தித்து வந்தனர். சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி மீண்டும் உயரத்தொடங்கியதால் பங்குச்சந்தைத் துறையில் ஒரு நெகிழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். முதலீட்டாளர்களுக்கு இது ஒரு தற்காலிக நிம்மதியாக இருப்பதோடு, சந்தையில் மீண்டும் ஊக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் பார்க்கப்படுகிறது.
0 Comments