தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் விண்ணப்பிக்கும் அதே நாளிலேயே வழங்கப்பட்டு வருகிறது
The Forecast 1 month ago தமிழ்நாடு
தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடனுக்கு விண்ணப்பிக்கும் விவசாயிகளுக்கு, அதே நாளிலேயே கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் விவசாய பணிகள் தாமதமின்றி நடைபெற உதவுகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மாநிலம் முழுவதும் சுமார் 60,000 விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர். மொத்தமாக ரூ.25 கோடி அளவிற்கு பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு, பயிர் கடன் மற்றும் நகைக் கடன் தள்ளுபடி செய்யும் வாய்ப்புகள் குறித்து அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே நம்பிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
0 Comments