Loading . . .




தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: கட்சிகளுக்கு 38 நாள் பிரச்சார காலம்

Janani G 4 weeks ago தமிழ்நாடு


தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டதையடுத்து அரசியல் கட்சிகளுக்கு 38 நாள் தேர்தல் பிரச்சார காலம் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய தேர்தல் ஆணையம் மார்ச் 15 அன்று தேர்தல் அட்டவணையை அறிவித்துள்ளது. அதன் படி தேர்தல் பிரச்சாரம் ஏப்ரல் 21 மாலை 5 மணி வரை நடைபெறும். தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு ஏப்ரல் 23 அன்று நடைபெற உள்ளது. அட்டவணை அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளன.

இந்த காலம் கூட்டணி அமைத்து போட்டியிடும் கட்சிகளுக்கு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த நாட்களில் தொகுதி பங்கீடு முடிவு செய்வது, போட்டியிடும் தொகுதிகளை தேர்வு செய்வது, வேட்பாளர்களை அறிவிப்பது, வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வது மற்றும் தேர்தல் அறிக்கைகளை வெளியிடுவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.

இதுபோன்ற 38 நாள் பிரச்சார காலமே 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் வழங்கப்பட்டது.

இப்போது தேர்தல் பணிகள் வேகமெடுத்து வரும் நிலையில் அரசியல் கட்சிகள் விரைவில் முழு அளவிலான பிரச்சாரத்தை தொடங்க உள்ளன.


0 Comments

Post your comment here

தமிழ்நாடு Relateted News