வெனிசுலா நாடு, இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய கச்சா எண்ணெய் வழங்குநராக மே மாதத்தில் உயர்ந்துள்ளது. இதன் மூலம் சவூதி அரேபியா மற்றும் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி வெனிசுலா புதிய இடத்தை பெற்றுள்ளது. இந்தியாவின் எரிசக்தி இறக்குமதி அமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் முக்கிய முன்னேற்றமாக இது பார்க்கப்படுகிறது.
தகவல்களின் படி, ஏப்ரல் மாதத்தில் தினசரி 2.83 லட்சம் பேரல்களாக இருந்த வெனிசுலா கச்சா எண்ணெய் இறக்குமதி, மே 1 முதல் 20ஆம் தேதி வரை 47 சதவீதம் உயர்ந்து 4.17 லட்சம் பேரல்களாக அதிகரித்துள்ளது. குறைந்த விலை மற்றும் அதிக தேவையை கருத்தில் கொண்டு இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் வெனிசுலா எண்ணெய் இறக்குமதியை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் ரஷ்யா தினசரி சுமார் 19 லட்சம் பேரல்கள் வழங்கி இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் வழங்குநராக தொடர்கிறது.ஐக்கிய அரபு அமீரகம் தினசரி 5.6 லட்சம் பேரல்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
உலக சந்தை மாற்றங்களுக்கிடையில் இந்தியா பல நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய முயற்சி செய்து வருவதாக எரிசக்தி துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
0 Comments