போடி நகராட்சி சார்பாக மாணவ, மாணவிகளுக்கு போட்டி! தேனி மாவட்டம் போடி நகராட்சி அலுவலகத்தில் மக்காத கழிவுகளை பிரித்து வீட்டு உபயோகப் பொருட்கள், அழகுசாதனபொருட்கள் தயாரிக்கும் போட்டி நடைபெற்றது.இந்த போட்டி போடி நகராட்சி சேர்மன் ராஜராஜேஸ்வரி சங்கர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இந்த போட்டியில் 150மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு மக்காத குப்பைகளில் இருந்து அழகுசாதன பொருட்கள், வீட்டு உபயோகப்பொருட்களை தயாரித்தனர். போட்டியில் கலந்துகொண்ட மாணவ, மாணவிகளுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பாக பரிசுகளும், பாராட்டு சான்றிதலும் வழங்கப்பட்டது.
0 Comments