அமைச்சர் . செஞ்சி கே.எஸ். மஸ்தான் தலைமையில், சிறுபான்மையினர் நலன் தொடர்பாக ஆய்வு
The Forecast 3 years ago சிறுபான்மைத் துறை
(06.01.2023) தலைமைச் செயலகத்தில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை
அமைச்சர் . செஞ்சி கே.எஸ். மஸ்தான் அவர்கள் தலைமையில், சிறுபான்மையினர் நலன் தொடர்பாக செயல்படுத்தப்பட்டு
வருகின்ற அரசு திட்டங்கள் குறித்து அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர்கள் மற்றும் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலர்களுடன் ஆய்வுமேற்கொண்டார். இக்கூட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர்,
மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திருமங்கத்ராம் சர்மா, இ.ஆ.ப.,சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் முனைவர் சீ.சுரேஷ் குமார், இ.ஆ.ப., தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் செயலாளர் .டி.ரவிச்சந்திரன், இ.ஆ.ப.,மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments