Loading . . .




போர் பதற்றம் குறித்து நெதன்யாகுவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார்

The Forecast 1 month ago உலக செய்திகள்

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடன் தொலைபேசியில் உரையாடினார்.

இந்த உரையாடலில், தற்போதைய மத்திய கிழக்கு நிலவரம் குறித்து இந்தியாவின் ஆழ்ந்த கவலையை பிரதமர் மோடி தெரிவித்தார். பொதுமக்களின் பாதுகாப்புக்கு மிக உயர்ந்த முன்னுரிமை அளிக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். மேலும், போர் நடவடிக்கைகள் விரைவில் நிறுத்தப்பட வேண்டும் என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.

இந்த தகவலை பிரதமர் மோடி தனது X பதிவின் மூலம் பகிர்ந்துள்ளார். அமைதி, உரையாடல் மற்றும் நிலைத்த தீர்வு என்பதே இந்தியாவின் நிலைப்பாடு எனவும் அவர் தெரிவித்தார்.

0 Comments

Post your comment here

உலக செய்திகள் Relateted News