Loading . . .




பூமியின் காந்த துருவ மாற்றம் 70,000 ஆண்டுகள் நீடிக்கலாம்: புதிய ஆய்வு

Janani G 1 month ago அறிவியல்

பூமியின் காந்தப் புலம் துருவங்கள் மாற்றம் அடையும் காலம் முன்பு கருதியதை விட மிகவும் நீண்டதாக இருக்கலாம் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

பூமியின் காந்தப் புலம் திசை நிர்ணயத்திற்கு உதவுவதுடன், சூரியனிலிருந்து வரும் அதிக ஆற்றல் கொண்ட கதிர்வீச்சுகளிலிருந்து பூமியை பாதுகாக்கும் முக்கிய பாதுகாப்பு அமைப்பாகவும் செயல்படுகிறது. இதுவரை விஞ்ஞானிகள், வட மற்றும் தென் துருவங்கள் இடமாற்றம் அடையும் இந்த செயல்முறை சுமார் 10,000 ஆண்டுகளில் முடிவடையும் என்று நம்பி வந்தனர்.

ஆனால் கம்யூனிகேஷன்ஸ் எர்த் அண்ட் என்விரான்மெண்ட் என்ற அறிவியல் இதழில் வெளியான புதிய ஆய்வு இந்த கருத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டியதைக் காட்டுகிறது. பிரான்ஸ், ஜப்பான் மற்றும் அமெரிக்கா நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கடந்த 4 கோடி ஆண்டுகளின் பூமி வரலாற்றை ஆய்வு செய்து, சில துருவ மாற்றங்கள் 70,000 ஆண்டுகள் வரை நீடித்திருக்கலாம் என்று கண்டறிந்துள்ளனர்.

இந்த காலத்தில் காந்தப் புலம் பலவீனமாக இருப்பதால், பூமி அதிக சூரிய கதிர்வீச்சுக்கு வெளிப்பட வாய்ப்பு இருப்பதாகவும் ஆய்வு கூறுகிறது. இந்த கண்டுபிடிப்பு பூமியின் இயற்கை பாதுகாப்பு அமைப்புகளைப் பற்றிய புரிதலை மேலும் வலுப்படுத்துகிறது.


0 Comments

Post your comment here

அறிவியல் Relateted News