இஸ்ரோ, லடாக்கில் விண்வெளி வீரர்களின் உடல் மற்றும் மனத் திறனை ஆய்வு செய்ய புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது.
Mission MITRA எனப்படும் இந்த ஆய்வு, லே பகுதியில் சுமார் 3,500 மீட்டர் உயரத்தில் நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 9 வரை நடைபெறும் இந்த திட்டம், குறைந்த ஆக்சிஜன், கடும் குளிர் மற்றும் தனிமை போன்ற சூழ்நிலைகளை உருவாக்கி விண்வெளி சூழலை ஒத்த நிலையில் ஆய்வு செய்கிறது.
இந்த ஆய்வின் மூலம், விண்வெளி வீரர்கள் மற்றும் தரை கட்டுப்பாட்டு குழுவினரின் செயல்திறன், ஒருங்கிணைப்பு மற்றும் அழுத்தநிலையில் முடிவு எடுக்கும் திறன் ஆகியவை மதிப்பிடப்படுகின்றன. இந்த தரவுகள், எதிர்கால மனித விண்வெளி பயணங்களுக்கு முக்கியமானதாக இருக்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்த திட்டம் இஸ்ரோ மற்றும் இந்திய விமானப்படையின் வான்வெளி மருத்துவ நிறுவனம் இணைந்து வடிவமைத்தது. பெங்களூருவை சேர்ந்த புரோட்டோபிளானெட் நிறுவனம் வசதி மற்றும் நடைமுறைகளை கவனித்து வருகிறது.
இந்த ஆய்வு, ககன்யான் திட்டம் உள்ளிட்ட எதிர்கால திட்டங்களுக்கு உதவும் முக்கிய முன்னேற்றமாகும்.
0 Comments