மின் வாகன பயன்பாட்டை வேகமாக அதிகரிக்கும் நோக்கில், டெல்லி அரசு புதிய மின் வாகனக் கொள்கையை அறிவித்துள்ளது. இந்தக் கொள்கையின் கீழ், மின்சார மூன்று சக்கர வாகனம் வாங்குபவர்களுக்கு ரூ.50,000 மற்றும் மின்சார இரு சக்கர வாகனம் வாங்குபவர்களுக்கு ரூ.30,000 மானியம் வழங்கப்படும். மேலும், பி.எஸ்.-4 வாகனங்களின் பயன்பாட்டை நிறுத்துபவர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
இந்த புதிய கொள்கையின்படி, 2027 ஜனவரி 1 முதல் புதிய மின்சார ஆட்டோக்கள் மட்டுமே பதிவு செய்ய அனுமதிக்கப்படும். அதனைத் தொடர்ந்து, 2028 ஜனவரி 1 முதல் டெல்லியில் புதிய மின்சார இரு சக்கர வாகனங்கள் மட்டுமே பதிவு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாசுபாட்டைக் குறைத்து சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்தை ஊக்குவிப்பதே அரசின் முக்கிய நோக்கமாகும்.
அடுத்தாண்டு இறுதிக்குள் டெல்லியில் பதிவு செய்யப்படும் மொத்த புதிய வாகனங்களில் 95 சதவீதம் மின்சார வாகனங்களாக மாற்றும் இலக்கையும் அரசு நிர்ணயித்துள்ளது. இதற்காக மின் வாகனங்களுக்கான சார்ஜிங் வசதிகள் மற்றும் தேவையான உள்கட்டமைப்புகளும் விரிவுபடுத்தப்பட உள்ளன.
இந்தக் கொள்கை, தூய்மையான போக்குவரத்தை ஊக்குவிப்பதோடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான நகர்ப்புற வளர்ச்சிக்கான டெல்லி அரசின் முக்கிய முயற்சியாகக் கருதப்படுகிறது.
0 Comments