சென்னை மளிகைப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொருட்கள் அமைச்சர் கே.என்.நேரு
The Forecast 3 years ago சிவ தாஸ் மீனா இ.ஆ.ப.
பெருநகர சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் மண்டலம், வார்டு-156க்குட்பட்ட முகலிவாக்கம், திருவள்ளுவர் நகர் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு மளிகைப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொருட்களை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் .கே.என்.நேரு அவர்கள், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் .சா.மு.நாசர் ஆகியோர் (15.11.2022) வழங்கினர். இந்நிகழ்வில், மேயர் ஆர். பிரியா அவர்கள், துணை மேயர் .மு.மகேஷ் குமார் அவர்கள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் .சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., அவர்கள், முதன்மைச் செயலாளர்/ ஆணையாளர் .ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அவர்கள், மண்டல குழுத் தலைவர் .என்.சந்திரன் அவர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.
0 Comments