பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி : காவல் துணை ஆணையர் தொடங்கி வைத்தார்
The Forecast 2 years ago திருநெல்வேலி
மாநகர காவல் துணை ஆணையர் (கிழக்கு) ஆதர்ஸ் பச்சிரா
திருநெல்வேலி பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கில் இன்று முதல், திருநெல்வேலி மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டிகள் நடைபெறுகிறது. இதில் மாவட்டம் முழுவதுமிருந்து 16 அணிகள் கலந்து கொண்டன. இப்போட்டியின் தொடக்கவிழா இன்று காலை தொடங்கியது.
இதனை மாநகர காவல் துணை ஆணையர் (கிழக்கு) ஆதர்ஸ் பச்சிரா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வீரர்-வீராங்கனைகளின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்று போட்டிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் கிருஷ்ணன் சக்கரவர்த்தி முன்னிலை வகித்தார். ஏற்பாடுகளை ஹாக்கி யூனிட் ஆப் திருநெல்வேலி தலைவர் சேவியர் ஜோதி சற்குணம் தலைமையில் செய்திருந்தனர்.
0 Comments