மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பதால் அருவியில் குளிக்க வனத்துறையினரால் தடைவிதிக்கப்பட்டுள்ளது
S. Shanmuganathan 2 years ago திருநெல்வேலி
மணிமுத்தாறு அருவி
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பிரதான அருவியான மணிமுத்தாறு அருவி சார்ந்த பகுதியில் நேற்று கனமழை பெய்தது. இதனால் அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் தற்போது சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். ஆனால் அருவியை பார்வையிட மட்டும் அனுமதி வழங்கி உள்ளனர்.
0 Comments