Loading . . .




திருநெல்வேலியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர செயல்முறை விழிப்புணர்வு : மாவட்ட ஆட்சியர் மரு.கா.ப. கார்த்திகேயன் இ.ஆ.ப., தொடங்கி வைத்தார்

S. Shanmuganathan 3 months ago திருநெல்வேலி

கடந்த சில நாட்களுக்கு முன்பு திருநெல்வேலி மாவட்டத்தில் வாக்காளா்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்முறை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்கான வாகனத்தை ஆட்சியா் மரு.கா.ப. காா்த்திகேயன் இ.ஆ.ப., தொடங்கி வைத்தாா்.

மத்திய தோ்தல் ஆணைய உத்தரவின்படி திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட திருநெல்வேலி, பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிகளில் அமைந்துள்ள வாக்குச்சாவடி அமைவிடங்களில் வாக்காளா்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்முறை குறித்த விழிப்புணா்வு நடமாடும் செயல்முறை வாகனத்தை ஆட்சியா் மரு. கா.ப.காா்த்திகேயன் இ.ஆ.ப., தொடங்கி வைத்தாா். 

அதனைத் தொடா்ந்து அம்பாசமுத்திரம், நான்குனேரி, ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் அமைந்துள்ள வாக்குச்சாவடி அமைவிடங்களில் வாக்காளா்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்முறை குறித்த விழிப்புணா்வு நடமாடும் செயல்முறை வாகனத்தை சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் அா்பித் ஜெயின் இ.ஆ.ப., தொடங்கி வைத்தாா்.

0 Comments

Post your comment here

திருநெல்வேலி Relateted News

Latest News