வங்கக் கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
The Forecast 1 year ago வானிலை நிலவரம்.
வங்கக் கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக வருகின்ற 10ஆம் தேதி முதல் நாகை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை & ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், 11ஆம் தேதி செங்கல்பட்டு, காஞ்சி, விழுப்புரம், கடலூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், தஞ்சை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
0 Comments