தீவிர மழைக்கு எச்சரிக்கை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு!
Janani G 8 months ago வானிலை நிலவரம்.
இந்தியா வானிலை ஆய்வு மையம் (IMD) வெளியிட்ட தகவலின்படி, தேனி, தென்காசி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு நாளை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. வானிலை தொடர்ந்து தீவிரமடைந்துவருவதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அரசு தரப்பில் எச்சரிக்கைகள் வழங்கப்பட்டுள்ளது.
0 Comments