ஏசி மற்றும் குளிர்சாதன பெட்டிகளின் விலை 2026ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் உயரக்கூடும் என தயாரிப்பு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன. கம்பிரசர் இறக்குமதிக்கு ஒன்றிய அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் காரணமாக உற்பத்தி செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக தொழில் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குளிர்பதன சாதனங்களின் முக்கிய கூறாக இருக்கும் கம்பிரசர்களின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் இந்த கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வெளிநாட்டு இறக்குமதியின்மீது சார்பை குறைத்து, இந்தியாவில் தயாரிப்பு திறனை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஆனால் தற்போது இந்தியாவில் உள்ள கம்பிரசர் உற்பத்தி திறன், சந்தையின் வளர்ந்து வரும் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை என தயாரிப்பு நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன. இதனால் உற்பத்தி தாமதம் மற்றும் கூடுதல் செலவுகள் ஏற்படக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக ஏசி மற்றும் குளிர்சாதன பெட்டிகளுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக கோடை காலங்களில் விற்பனை அதிகரிப்பதால் சந்தை தேவையும் உயர்ந்துள்ளது.
உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் அரசின் முயற்சிகளுக்கும், சந்தை தேவையை சமநிலைப்படுத்தும் சவால்களுக்கும் இடையே இந்த மாற்றம் முக்கியமான கட்டமாக பார்க்கப்படுகிறது.
0 Comments