செய்தித் துறை அமைச்சர் . மு.பெ.சாமிநாதன் அவர்களின் இரங்கல் செய்தி
The Forecast 3 years ago செய்தித்துறை
முரசொலி நாளிதழின் துணை ஆசிரியராக 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்த திரு. மு. ராஜா (வயது 56) அவர்கள் பொங்கல் நாளன்று எதிர்பாராத விதமாக ஏற்பட்ட சாலை விபத்தின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பதை அறிந்து மிகவும் மன வேதனை அடைந்தேன்.
. மு. ராஜா அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், முரசொலி நாளிதழின் செய்தியாளர்களுக்கும், இதர ஊழியர்களுக்கும் மற்றும் பத்திரிகைத் துறை நண்பர்களுக்கும் இத்துயர்மிகு நேரத்தில் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
0 Comments