Loading . . .




திருநெல்வேலி மாவட்ட விளையாட்டு சங்கத்தின் சார்பில் 23 வகையான விளையாட்டுப் போட்டிகள் : விளையாட்டு சங்கங்கள் அறிவிப்பு

S. Shanmuganathan 2 years ago திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்ட அனைத்து விளையாட்டு சங்கங்களின் சாா்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 23 வகையான விளையாட்டுப் போட்டிகள் வரும் 7-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளன.

இது தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட அனைத்து விளையாட்டு சங்கங்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட அனைத்து விளையாட்டு சங்கங்களின் சாா்பில் மாவட்ட அளவிலான தடகளம், வாள் சண்டை, டென்னிஸ், நீச்சல், ஹாக்கி, சைக்கிள் போலோ, சைக்கிளிங், ஜூடோ, ஹேண்ட்பால், வாலிபால், கபடி, கூடைப்பந்து, குத்துச்சண்டை, பூப்பந்து, டேக்வாண்டோ, செஸ், எறிபந்து, கேரம், அட்யா பட்யா, டென்னிகாய்ட், யோகா, கோ- கோ, ரோல்பால், நெட்பால் ஆகிய விளையாட்டுகள் பொங்கல் விளையாட்டுப் போட்டிகளாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறவுள்ளன.

இந்தப் போட்டியானது வரும் 7-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு, சங்கத்தின் தலைவா் க. சேவியா் ஜோதி சற்குணம் தலைமை வகித்தாா். செயலா் வெ.பெரியதுரை, பொருளாளா் பிரேமச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக அகா்வால் கண் மருத்துவமனையின் தலைமை மருத்துவரும், மாவட்ட இறகுப் பந்து கழகத்தின் தலைவருமான லயனல்ராஜ் கலந்து கொண்டாா். சங்க நிா்வாகிகள் சாகுல் ஹமீது, ரவீந்திரன், குமாா், ஹில்டா பொன்மணி, அழகேச ராஜா, அருணாசல வடிவு, சத்தீஷ், வேல்சாமி, அருண் ஆகியோரும் கலந்துகொண்டனா்.

0 Comments

Post your comment here

திருநெல்வேலி Relateted News