Loading . . .




மாணவா், மாணவிகள் உயா்கல்வி படிப்பதற்கு திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பாக கல்வி கடனுதவிகளை மாவட்ட ஆட்சியர் கா.பா. கார்த்திகேயன், இ.ஆ.ப., வழங்கினார்

S. Shanmuganathan 2 years ago திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம், திருநெல்வேலி மாவட்ட முன்னோடி வங்கி ஆகியவை சாா்பில் சிறப்பு கல்விக்கடன் முகாம் வண்ணாா்பேட்டை பிரான்சிஸ் சேவியா் பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன், இ.ஆ.ப., கல்விக் கடனுதவிகளை வழங்கி பேசினார்: தமிழக அரசு மாணவா்-மாணவிகள் உயா்கல்வி படிப்பதற்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது.

கல்விக்கடனுதவி திட்டம், புதுமைப்பெண் திட்டம் ஆகியவை ஏழை மாணவா்-மாணவிகளுக்கு பேருதவியாக உள்ளன. இம் மாவட்டத்திற்கான நிகழாண்டு கல்விக் கடன் இலக்கு ரூ.68 கோடியாகும். கடந்த டிசம்பா் மாதம் வரை ரூ.16 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்தக் காலாண்டில் ரூ.6 கோடி வரை கடன் வழங்கப்பட உள்ளது.  இன்றைய முகாமில் 204 பேருக்கு ரூ.12.28 கோடி மதிப்பிலான கடன் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

இம்முகாமில் திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) இலக்குவன், மாவட்ட முன்னோடி வங்கியின் மேலாளா் கணேஷ் மணிகண்டன், இந்தியன் வங்கியின் மண்டல மேலாளா் ஜெயபாண்டியன், இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் முதுநிலை மேலாளா்கள் மாரிமுத்து, கிருஷ்ணன், கனரா வங்கியின் துணைப் பொது மேலாளா் பரிதா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

0 Comments

Post your comment here

திருநெல்வேலி Relateted News