தமிழகதின் பல பகுதிகளில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் தென் மாவட்டங்களில் மழை தீவிரமாக இருக்கும் வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வானிலை மையத்தின் சமீபத்திய அறிவிப்பின் படி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, நீலகிரி, கோவை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழையும் வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேக்கம் மற்றும் போக்குவரத்து பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால் மக்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மலைப்பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் பயணிகள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக நிலவி வந்த கடும் வெப்பத்துக்கு இந்த மழை ஓரளவு நிவாரணம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விவசாய நிலங்கள் மற்றும் நீர்நிலைகளுக்கும் இந்த மழை பயனளிக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மழை தொடர்பான அடுத்தடுத்த அறிவிப்புகளை பொதுமக்கள் தொடர்ந்து கவனிக்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
0 Comments