Loading . . .




அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டமானது (16.06.2022), போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தலைமையில் நடைபெற்றது.

The Forecast 3 years ago போக்குவரத்துத்துறை

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுரையின் பேரில், அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு

கூட்டமானது,  போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர்

அவர்கள் தலைமையில், இன்று (16.06.2022), தலைமைச் செயலகத்தில்

நடைபெற்றது. இக்கூட்டத்தில் போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர்

டாக்டர் கே.கோபால்,இ.ஆ.ப., போக்குவரத்துத்துறை கூடுதல் செயலாளர், அனைத்துப்

போக்குவரத்துக் கழகங்களின் மேலாண் இயக்குநர்கள், சாலைப் போக்குவரத்து

நிறுவன இயக்குநர், தனி அலுவலர், தலைவர் அலுவலகம் மற்றும் போக்குவரத்துத்

துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் அரசு

போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள், நிதி நிலையினை மேம்படுத்துதல்,

அறிவிப்புகளின் செயல்படுத்தல் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள்.

பேருந்துகளின் இயக்கம் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் போது, மாண்புமிகு

முதலமைச்சரின் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டத்தை சிறப்பாக

செயல்படுத்தி வருவதற்காக அனைவருக்கும் பாராட்டு தெரிவித்தார். இதன் மூலம்

அதிக மகளிர் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்வதாகவும், சாதாரணக் கட்டண

பயணிகளில் மகளிரின் பங்கு 40% லிருந்து 62.28 % உயர்ந்துள்ளதாகவும், 16.06.2022

வரை 126.10 கோடி மகளிர் பயணம் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலாளர் அவர்கள் இத்திட்டத்தை பற்றி

குறிப்பிடும்போது, மாநில திட்டக்குழுவும் இத்திட்டத்தை வெகுவாக பாராட்டியதாக

தெரிவித்தார்.

மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள், சாதாரணக் கட்டணப்

பேருந்துகள் இயக்கப்படாத பகுதிகளை கண்டறிந்து, ஆய்வு செய்து பேருந்துகளை

இயக்கிடவும், மாணவ, மாணவிகள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்றிட ஏதுவாக

அனைத்து நகரப் பேருந்துகளையும் இயக்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என

அறிவுரை வழங்கினார்கள். மகளிர் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் அனைத்துப்

பேருந்துகளையும் ஒரே வண்ணத்தின் கீழ் கொண்டுவருமாறு ஆலோசனை

வழங்கினார்.

மேலும், நாள்தோறும் இயக்கப்படும் இரவு நேரப் பேருந்துகள் இயக்கத்தையும்,

தொலைதூர பேருந்துகள் இயக்கத்தையும் உறுதி செய்ய வேண்டும் என கூறினார்கள்.

2022-23 ஆண்டிற்கான

சட்டசபையில்

அறிவித்துள்ள

அறிவிப்புகளில்

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் செய்யும்

திட்டத்தை உடனடியாக அமல்படுத்திவிட்டதாகவும், அரசு விரைவுப் போக்குவரத்துக்

கழகப் பேருந்துகளில் பயண சுமைப் பெட்டிகள் வாடகைக்கு விடுதல் மற்றும்

இணைய வழியாக முன்பதிவு செய்யும் இருவழி பயணச் சீட்டுகளுக்கு 10 % கட்டண

சலுகை அறிமுகப்படுத்தலின் மென்பொருள் ஆய்வில் உள்ளதாகவும் அலுவலர்கள்

தெரிவித்தனர்.

மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள், அனைத்துப்

போக்குவரத்துக் கழகங்களுக்கும் பொதுவாக ஒருங்கிணைந்த பயணிகள்

குறைதீர்க்கும் உதவி மையத்தை விரைவில் செயல்படுத்துமாறும், பெருநகரங்களில்

உள்ள பேருந்து முனையங்களில் தகவல் பலகை மூலம் பயணியர் தகவல்களை

அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மேலும், தகவல் தொழில்நுட்பத்தை

முழுவதுமாக பயன்படுத்தி, பேருந்துகள் இயக்கம், வழித்தடத்திற்கான ஓட்டுநர் மற்றும்

நடத்துநர் தினசரி பணி ஒதுக்கீடு. உருளிப்பட்டையில் உள்ள காற்றின் அழுத்தம்,

அனைத்துப் பேருந்துகளிலும் CCTV கேமராக்கள் மற்றும் அவசர அழைப்பு

பொத்தான்கள், பேருந்தினுள் ஒலிபெருக்கி மூலம் அடுத்த பேருந்து நிலைய

அறிவிப்பு, Chennai Bus செயலியினை அனைத்துப் போக்குவரத்துக் கழகப்

பேருந்துகளுக்கும் விரிவுப்படுத்துதல், போக்குவரத்துக் கழகங்களின் இயக்க

செயல்பாடுகளை கண்காணிக்கும் வகையில் Dash Board நிறுவுதல், பொதுமக்கள்

மற்றும் பணியாளர்கள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு போக்குவரத்துக்

கழகத்திற்க்கும் தனித்தனி வலைதளம் உருவாக்குதல் உள்ளிட்டவற்றை விரைந்து

செயல்படுத்திட வேண்டும் என அறிவுறுத்தினார்.

மேலும், பயணக் கட்டணத்தை தவிர்த்து, விளம்பரம் மூலம் இதர வருவாயினை

பெருக்குவதற்கான சாத்தியக்கூறுகளை முழுமையாக ஆராய்ந்து செயல்படுத்திட

வேண்டும் என அறிவுரை வழங்கினார். டீசல் பேருந்துகளுக்கு மாற்றாக அழுத்தப்பட்ட

இயற்கை எரிவாயு (CNG) மற்றும் மின்சாரப் பேருந்துகளை படிப்படியாக இயக்கிட

நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனவும் தெரிவித்தார்கள்.

0 Comments

Post your comment here

போக்குவரத்துத்துறை Relateted News