திருப்பூர் மாநகராட்சி, சிக்கண்ணா கலை கல்லூரியில் கேலோ இந்தியா பிரச்சார வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார் அமைச்சர் மு.பெ.சாமிநாதன்
The Forecast 2 years ago திருப்பூர்
செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ், மேயர் ந.தினேஷ்குமார், மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் இ.ஆ.ப.,
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் நேற்று திருப்பூர் மாநகராட்சி, சிக்கண்ணா கலை கல்லூரியில் கேலோ இந்தியா பிரச்சார வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்து, கேலோ இந்தியா யூத் கேம்ஸ் மினி மாரத்தான் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.
உடன் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ், மேயர் ந.தினேஷ்குமார், மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் இ.ஆ.ப., துணை மேயர் பாலசுப்பிரமணியம், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன் மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலர் மு.ரகுகுமார் ஆகியோர் உள்ளனர்.
0 Comments