விஜயவாடா முதல் ஸ்ரீசைலம் வரையில் கடல் விமானச் சேவை சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது
Janani G 1 year ago ஆந்திரா
ஆந்திராவின் விஜயவாடா - ஸ்ரீசைலம் வரையில் கடல் விமானச் சேவை சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது. மேலும், பிரகாசம் தடுப்பணையிலிருந்து புறப்பட்ட இந்த விமானத்தில் முதல்வர் சந்திரபாபு, மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு உள்ளிட்டோர் பயணம் செய்தனர்.
மேலும், 14 பேர் வரை இந்த விமானத்தில் பயணிக்க முடியும். சாலை மார்க்கமாக 8 மணி நேரமாகும் பயண நேரம், கடல் விமானத்தால் 40 நிமிடமாகக் குறையும் என கூறப்படுகிறது.
0 Comments