திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், கிருஷ்ணாபுரம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை மற்றும் வடிப்பாலையினை அமைச்சர் பெருமக்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்
The Forecast 1 year ago திருப்பூர்
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் நேற்று திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், கிருஷ்ணாபுரம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை மற்றும் வடிப்பாலையினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்துராஜ் இ.ஆ.ப., பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் க.ஈஸ்வரசாமி, சர்க்கரைத்துறை கூடுதல் இயக்குனர் பி.பாலமுருகன், தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை இணைய மேலாண்மை இயக்குநர் டி.ரமணி தேவி, திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் (பொ) மோகனசுந்தரம், ஆலையின் செயலாட்சியர் யோகவிஷ்ணு, தலைமை பொறியாளர் சக்திவேல் ஆகியோர் உடனிருந்தனர்.
0 Comments