தேசிய அளவில் நடந்த தடகளப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற அரசு பள்ளி மாணவிக்கு உற்சாக வரவேற்பு
Janani G 1 year ago திருப்பூர்
திருப்பூர் ஜெய்வாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி வர்ஷிகா தேசிய அளவில் நடந்த தடகளப் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று திருப்பூர் திரும்பினார். இந்நிலையில், திருப்பூர் குமரன் நினைவகத்தில் இருந்து பள்ளி நிர்வாகம் சார்பில் பேண்ட் வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்து பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஆசிரியர்கள் மாணவிக்கு பரிசு வழங்கி பாராட்டினர்.
0 Comments