Loading . . .




இராஜபாளையம் நேரு சிலை முதல் சொக்கர்கோவில் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையை தார் சாலையாக மாற்ற மனு. MLA S.தங்கப்பாண்டியன்

The Forecast 3 years ago தங்கபாண்டியன்


இராஇராஜபாளையம் நகரின் வளர்ச்சித்திட்டப் பணிகளுக்காக நேரு சிலை முதல் சொக்கர்கோவில் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையில் தோண்டப்பட்டு திட்டப்பணிகள் நடைபெற்றது தற்போது இச்சாலையில் திட்டப்பணிகள் முடிவடைந்துள்ளதால் புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டி  சென்னை கிண்டியிலுள்ள நெடுஞ்சாலைத்துறையினரின் குடியிருப்பு இல்லத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறையின் தலைமைப் பொறியாளர்  (NH Chief Engineer)   பாலமுருகன் அவர்களை MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள்   (09.10.2022) மாலை 6 மணியளவில் நேரில் சந்தித்து மனு அளித்தார்.

 இந்நிகழ்வில் தலைமைப் பொறியாளர் அவர்களிடம்

 MLA அவர்கள் கூறுகையில் மேற்கண்ட சாலை மிகவும் பழுதடைந்து காணப்படுவதால் பொதுமக்கள் வியாபாரிகள் பெரிதும் பாதிப்படைகின்றனர் ஆகவே  நேரு சிலை முதல் சொக்கர்கோவில் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையில் விரைந்து புதியதாக தார்ச்சாலை அமைக்குமாறு கேட்டுக்கொண்டார் மேலும் சாலையின் விரிவாக்கத்திற்காக சாலையின் உள்பக்கமாக உள்ள மின் கம்பங்களை நகராட்சி மூலம் சாலையின் வெளிபக்கமாக மாற்றியமைத்துதருவதாக  என MLA அவர்கள் கூறினார் அதற்கு தலைமை பொறியாளர் அவர்கள் மத்திய மற்றும் மாநில நெடுச்சாலைத்துறை என இரண்டு துறை அதிகாரிகளிடம் கலந்துபேசி மதிப்பீடு தயார் செய்து டெல்லியிலுள்ள மத்திய நெடுஞ்சாலைத்துறையிடம் நிர்வாக அனுமதி பெற்று விரைவில் புதியதாக தார்ச்சாலை அமைத்து தருவதாக உறுதியளித்துள்ளார், அதற்கு MLA அவர்கள் மழைக்காலம் தொடங்க இருப்பதால் புதிய தார்ச்சாலை அமைக்கும் வரையில் சாலையிலுள்ள குண்டும் குழியையும் சீரமைக்கும்   பணியை (பேஷ் ஒர்க்) மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தினார் அதற்கு தலைமை பொறியாளர் அவர்கள் கண்டிப்பாக சாலை சீரமைத்து தருவதாக கூறினார்.

மேலும் மேற்கண்ட தேசிய நெடுஞ்சாலையில் புதியதாக தார்ச்சாலை அமைக்க  MLA அவர்கள் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டுவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் சரவணமுருகன் உடனிருந்தார்.

0 Comments

Post your comment here

தங்கபாண்டியன் Relateted News