ஆபரேஷன் சிந்தூரின் வெற்றிக்காக 400-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் இரவு பகலாக உழைத்தனர் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். புவி கண்காணிப்பு மற்றும் தொலைத்தொடர்பு தொடர்பான இந்தியாவின் அனைத்து செயற்கைக்கோள்களும் அந்த நேரத்தில் சிறப்பாக செயல்பட்டதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.
மேலும், ஆபரேஷன் சிந்தூரின் போது உருவான சவால்களை எதிர்கொள்வதில் விஞ்ஞானிகள் காட்டிய அர்ப்பணிப்பு மற்றும் ஒருங்கிணைந்த உழைப்பு, இந்தியாவின் விண்வெளி திறனைக் கணிசமாக வெளிப்படுத்தியதாக கூறினார். இந்த சாதனை, இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். உலக நாடுகளின் கவனத்தையும் பெற்றுள்ள இந்த வெற்றி, எதிர்காலத்தில் இந்தியாவின் விண்வெளி முயற்சிகளுக்கு ஊக்கமாக இருக்கும் என நம்பப்படுகிறது. விஞ்ஞானிகளின் உறுதியான முயற்சி மற்றும் தன்னலமற்ற அர்ப்பணிப்பு அனைவராலும் பாராட்டப்படுகிறது.
0 Comments