தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழா - சேலம் மாநகர காவல்துறையின் சார்பில் கண்காட்சி
The Forecast 3 years ago நகராட்சி நிர்வாகத் துறை
நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் சேலம், புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சித் திடலில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழாவினைதொடங்கி வைத்து சேலம் மாநகர காவல்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்கினை இன்று (20.11.2022) பார்வையிட்டார்கள். இவ்விழாவில் மாவட்ட
ஆட்சித்தலைவர் தசெ.கார்மேகம், இ.ஆ.ப., சேலம் மாநகராட்சி மேயர் திரு.ஆ.ராமச்சந்திரன், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் .எஸ்.ஆர்.பார்த்திபன், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் .ஏ.கே.பி.சின்ராஜ், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் .இரா.இராஜேந்திரன், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் .இரா.அருள், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் .எஸ்.சதாசிவம், சேலம் மாநகராட்சி ஆணையாளர் .தா.கிறிஸ்துராஜ், இ.ஆ.ப., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) .சீ.பாலச்சந்தர், இ.ஆ.ப., உதவி ஆட்சியர் (பயிற்சி) .வாகி சங்கீத் பல்வந்த், இ.ஆ.ப., சேலம் மாநகராட்சி துணை மேயர் திருமதி மா.சாரதா தேவி, மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ.மேனகா, தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்க செயலாளர் முருகன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.
0 Comments