சேலம் மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சித்தலைவராக டாக்டர். இரா. பிருந்தா தேவி, இ.ஆ.ப., பொறுப்பேற்றுக் கொண்டார்
The Forecast 2 years ago சேலம்
டாக்டர். இரா. பிருந்தா தேவி, இ.ஆ.ப.,
தோட்டக்கலை மற்றும் தோட்ட பயிர்கள் துறை இயக்குனராக பணியாற்றி வந்த டாக்டர். இரா. பிருந்தா தேவி, இ.ஆ.ப., நேற்று சேலம் மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சித்தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
மேலும் டாக்டர். இரா. பிருந்தா தேவி, இ.ஆ.ப., தான் பதவி ஏற்ற முதல் நாளே சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வருகை புரிந்த பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று, கோரிக்கைகளை கேட்டறிந்தார்கள். உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மரு.அலர்மேல்மங்கை, இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ.மேனகா, உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி.தி.சுவாதிஸ்ரீ, இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.ஜெகநாதன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.
0 Comments