கோவை, அக்.28: கோவை மாவட்டம் மதுக்கரை வட்டம் திருமலையாம்பாளையம் வடக்கு கிராமத்தில் கலெக்டர் சமீரன் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் வரும் நவம்பர் 9ம் தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு எட்டிமடை பிரிவில் அமைந்துள்ள கே.கே. மஹாலில் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக வரும் 28ம் தேதி காலை 10 மணிக்கு திருமலையாம்பாளையம் வடக்கு வி.ஏ.ஒ அலுவலகத்தில் கோவை தெற்கு வருவாய் கோட்டாட்சியரால் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட உள்ளது. இந்த தகவலை மதுக்கரை வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.
0 Comments