Loading . . .




320 கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் : ஒருவர் கைது

The Forecast 3 years ago கோவை

கோவை, ஜன.22: கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை பகுதியில் 1.600 கிலோ எடையுள்ள 320 கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல். விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கோவை   சுல்தான்பேட்டை சித்தநாயக்கன் பாளையம் பகுதியில் போதை ஏற்றக்கூடிய கஞ்சா சாக்லேட்டுகளை  விற்பனைக்கு பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்  காவல் உதவி ஆய்வாளர் சிவகுமார் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடமான சித்தநாயக்கன் பாளையம்   பேருந்து நிலையத்திற்கு  விரைந்து சென்று சோதனை மேற்கொண்ட போது விற்பனைக்காக கஞ்சா சாக்லேட்டுகளை வைத்திருந்த சூலூர் பகுதியை சேர்ந்த பப்ளு குமார் (36) கைது செய்து, அவரிடமிருந்து 1.600  கிலோ கிராம் எடையுள்ள 320 கஞ்சா சாக்லேட்களை பறிமுதல் செய்தனர்.

0 Comments

Post your comment here

கோவை Relateted News